Monday, July 21, 2008

தூறல் உங்களை வரவேற்கிறது!

வணக்கம்.

தூறல் உங்களை வரவேற்கிறது!

வருடம் 1982.

திருப்பூரில் நானும் என் நண்பர்களும், டி .வி . சுந்தரவடிவேலு
, ஹாரிஸ், சரவணன் போன்ற பலர் சேர்ந்து முயற்சி எடுத்து கொண்டு வந்த கை எழுத்து பிரதி தான் 'தூறல்'.

ஏழாம் வகுப்பு செயின்ட் ஜோசெப்சில் படித்துக்கொண்டு இருந்தேன். நன்கொடை வாங்க ரசீது புத்தகம் அடித்து, 40 ருபாய் ஆயிற்று, 28 ருபாய் மட்டும் கிடைத்த நாட்கள், மறக்க முடியாது.

மூன்று வருடம், மெட்ரிக் எழுதும் வரை, தூறல் நடந்தது. ஸ்கூல் ப்ரின்சிபலிடம், அந்த் புக் மாட்டி, நாங்கள் முழி பிதுங்கிய கதை, அருமை.

ஒரு நாள், தூறல் நின்னு போச்சு.

பிற்பாடு சங்கமம் என்றொரு கை எழுத்து பிரதி ஆரம்பித்து ஒரு வருடம் நடத்தினேன், பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பிஷப் உபகாரசாமி ஸ்கூலில்.

மீண்டும் தூறல்!

No comments: