Wednesday, January 13, 2016

உதவி

உதவி என்று கேட்டு சென்றால் யாரும் உதவ முன் வருவதில்லை. நான் செய்த உதவிகளை அசைப்போட்டுக்கொண்டே காலத்தை கழித்து விட வேண்டியது தான். கடைசியில் குழந்தைகளுக்கு கொடுக்கும் நல்ல படிப்பு தான் சொத்து. காலேஜ் வரை கரை சேர்த்துவிட்டால், எப்படியோ பிழைத்துக்கொள்வார்கள்!

 உனக்கு தான் அங்கே இவ்வளவு இங்கே அவ்வளவு இருக்கே என்ற நக்கல் வேறு. சொத்தை வித்து திங்க வேண்டியது தானே... இது சிலர்... அது தான் பாரீன் போய் நிறைய சம்பாரிச்சு பேங்கிலே போட்டு வச்சிருக்கே இல்லே... உக்காந்து என்ஜாய் பண்ணு...

 அது  வந்து என்னாலே அஞ்சாயிரம் தான் சம்பளம் கொடுக்க முடியும் ... ஒரு ஆறு மாசம் ப்ரீயா வேலை செய்யறியா? ஒரு கோடி அளவு ப்ராஜக்ட் புடிச்சு கொடுத்திடு என்னா? ஆனா அதில் லாபம் பாதி வரணும் ஓகேவா? அப்போ தான் உனக்கு அதில் அஞ்சு பர்சண்ட் தர்றேன்...

இந்த அஞ்சாயிரம் வாங்குறதுக்கு ஆறு கிலோ மீட்டர் வண்டிலே போகணும் வரணும். அதுக்கே சரியாயிடும். சாப்பாடு வேற தனி.

ஹோட்டலில் நன்றாக நொறுக்கி விட்டு - பில்லை நீ கட்டு என்பார்கள்... மகா கொடுமை. நொந்துக்கொண்டே, பாதி தான் நம் கணக்கல்லவா... என்று மனதிற்குள் அழ வேண்டும்.

விதி வலியது!