Tuesday, August 04, 2009

மரம்

பேப்பர் வேஸ்ட் செய்யாதே
மரங்கள் நிறைய வெட்டுகிறார்கள்
என்றேன் மகனிடம்
ஒன்றும் சொல்லாமல் சென்றவன்
சிறிது நேரம் கழித்து
ஒரு படத்தோடு வந்தான்
மரம் அழுதுக்கொண்டு இருந்தது
பக்கத்தில் மரம்வெட்டி கோடாலியுடன்
அவன் அருகில் ஓர் சிறுவன்
"வெட்டாதே" என்கிறான்
எனக்கு சொல்ல வார்த்தையில்லை!

No comments: