Saturday, August 08, 2009

உரையாடல் சிறுகதைப் போட்டி முடிவுகள்

சிறுகதைப் போட்டி முடிவுகள்

புத்தகமாக வெளி கொணர முடிவு எடுத்தவுடனே எனக்கு தெரியும், இப்படி பதிவிக்கும் நோக்கில் தேர்வு நடக்கும் என்று!

எதற்கு நீங்கள் அவர்களிடம் நேரடியாக கேட்டு கதை பெற்று புத்தகம் வெளியிட்டிருக்கலாம். :-)

ஒரு மயிலேஜ் கிடைத்துள்ளது, புத்தகம் விற்க! போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் என்றால், வாங்கும் கூட்டம் கொஞ்சம் அதிகம் தான்...

என்னை பொறுத்த வரை வேறு இருபது கதைகள் நான் தேர்ந்தெடுத்து உள்ளேன். அவற்றை பற்றி ஒரு பதிவு, நேரம் கிடைக்கும் போது  போடுகிறேன்.

நான் அதிகம் படிக்கும் ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கமும், எனது சிறுகதை ஆசான் சுஜாதாவின் நடையும் எதிர்பார்த்து இருக்கலாம்!

ஒவ்வொருவரின் ரசனை வித்தியாசமானது!

No comments: