Sunday, December 07, 2008

ரிதகவ்ளை ராகத்தில் சுடும் நிலவு

ரிதகவ்ளை ராகத்தில் சுடும் நிலவு
படம்: தம்பி
வெளிவந்த வருடம்: 2006
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்
இயற்றியவர்: வைரமுத்து




சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

(சுடும் நிலவு)

இமை அடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதி இருந்தாலும் நாவே உலரும்

தப்பு எல்லாம் கடிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சை தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்

நாக்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

(சுடும் நிலவு)

மழைத் துளி நமக்கு சமுத்திரம் ஆகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய் போகும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம் மோட்சமாகும்
மத்த பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தேய்ந்து மிருகம் ஆகும்
மிருகம் தூங்கி தெய்வம் ஆகும்

தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

(சுடும் நிலவு)



One more... ரிதகவ்ளை ராகத்தில் .. கண்கள் இரண்டால்....

No comments: