Wednesday, April 18, 2007

அமெரிக்காவிலே ஒரு நண்பர்

அமெரிக்காவிலே ஒரு நண்பர்

*****


நான் அமெரிக்காவிலே இருந்த காலத்தில்... ஒரு நண்பர் இருந்தார்.... திருச்சி ஆள். எப்படியோ விசா கோர்ஸ் பண்ணி 1996 மே மாசம் வந்துட்டார். சுமாராக, திணறி ஆங்கிலம் பேசுவார். நான் அவருக்கு முதலில் செட்டில் ஆக நிறைய உதவிகள் செய்துள்ளேன். சனி ஞாயிறு என்னோடு தான் சாப்பாடு... ஹோட்டல் சென்றால் - இந்தியன் பப்பே மட்டுமே - பீட்சா கூட அதிகம் செலவு என்பார்... மற்றவர்கள் வீட்டில் சென்று சாப்பிடுவதற்கு அவ்வளவு இஷ்டம். தன வீட்டில் ஒரு முறை கூட யாருக்கும் உணவு கொடுத்ததில்லை. அவர் ரூம் மெட்டும், அவர் மாதிரி தான்....

இந்தியா கம்பெனியில் ஒரு பாண்டு எழுதியிருந்தாலும் அதை மதிக்காமல் (பெப்ரவரி விசா வந்தது, ரொம்ப டிலே பண்ணிடாங்க - நண்பர்கள் எல்லாரும் அமெரிக்க போயிட்டாங்க, நான் மட்டும் எப்படி... மூணு மாசம் வேஸ்ட் ) விசா இருப்பதால், வேறு கம்பெனி மூலமா அமெரிக்க வந்துவிட்டார், அதெல்லாம் அப்படிதான் ... அந்த காலத்தில்... வேலை ப்ராஜக்ட் கிடைப்பது ரொம்ப ஈசி....

 அவர் கன்சல்டிங் பண்ணின கம்பெனியில் வேலைக்கு சம்பளம் குறைவு ( வருடம் 44 ஆயிரம் டாலர்கள் ).  ஒரு வருடத்தில் மே 97 (இந்தியர்கள் நடத்தும் கம்பெனி வருடம் ஒரு ரிடர்ன் டிக்கட் கொடுத்தார்கள்) லீவுக்கு இந்தியா போகிறேன் என்று சென்றவர் திரும்ப வரவில்லை.

நியூ யார்க்கில் இரு மடங்கு சம்பளம் கிடைக்கும் என்பதால்... (வருடம் 90 ஆயிரம் டாலர்கள்) வேறு ஒரு கம்பெனியில் சேர்ந்துக்கொண்டது யாருக்கும் தெரியவில்லை. அவரின் ரூம் மேட்டிற்கும் தெரியாமல் இவ்வளவு நடந்தது... அவர் கம்பெனி அக்கவுண்ட் மேனேஜர் என் நண்பர்... என்னை தேடி வந்து கேட்டார். யாருக்கு தெரியும்...  ??

அவர் தான் ஐந்தாயிரம் டாலர் கடன் வாங்கி ஊரில் வீடு வாங்க வகை செய்துவிட்டார்... கிளம்பும் சமயத்தில் எல்லோரிடமும் ... தன அம்மாவும் அண்ணனும் மிகுந்த சிரமத்தில் இருப்பதை சொல்லி... (அவர் அண்ணன் கொஞ்சம் மன நிலை சரி இல்லாத நிலையில் வயதான் காலத்தில் அவர் அம்மா தான் பார்த்துக்கொண்டு ...) ஒரு வருடத்தில் ஐந்து லட்சத்தில் ஒரு வீடு ( யாரும் அவ்வளவு - சுமார் 15 ஆயிரம் டாலர்கள் - 44 ஆயிரம் சம்பளம் - கையில் 30 வரும், செலவு பாதிக்கு மேல் ஆகும் .. மிச்சம் செய்வது கடினம் ) அர்ஜண்ட் என்று சொல்லி ஏதோ காரணம் சொல்லி பணம் வசூல் செய்தார். மூன்று நண்பர்களிடம் ஐந்தாயிரம் டாலர்கள் கடன் வாங்கி கம்பி நீட்டிவிட்டார்.

ரூம் மேட்டிற்கும் நாலு மாதம் வாடகை கொடுக்கவில்லை... பாவம் அவருக்கு தான் நஷ்டம். சொல்லவில்லை... சொன்னாரா தெரியவில்லை.... தர்மம் தலைகாக்கும்... ஊருக்கு கிளம்பும் போது  மூன்று சூட்கேசில் துணி மணிகளை பேக் செய்தவர் (இரண்டை நியூ ஜெர்சியில் ஒரு நண்பர் வீட்டில் வைத்துவிட்டு போயுள்ளார்... ), நியூ யார்க்கில் தான் ஏர் இந்தியா  ப்ளைட் பிடித்தார்... அது தான் குறைவான விலையில் தரமான ப்ளைட் கொடுக்கும் நம்ம ஊர் ஏர்லைன்ஸ்.

என்னோடு மிசிகனில் வேலை செய்த இன்னொரு நண்பர் மூலம் அவர் நியூ ஜெர்சியில் தங்கியிருந்த தகவல் ஒரு மாதம் கழித்து தெரிந்தது... அதே ப்ராஜக்ட் ... நியூ ஜெர்சியில் வாசம்... என் நண்பர் மூலம் அவர் வீட்டு விலாசமும் கிடைத்தது...

அங்கு தான் வாரா வாரம் சனியன்று மளிகை வாங்க கடைக்கு (இந்தியர்கள் - படேல் - குஜராத்திகள் நடத்தும் கடைகள் பிரசித்தம்) சுற்றியுள்ளவர்கள் (பென்சில்வேனியா) செல்வார்கள். எப்படியோ அவர் இருக்கும் மடாவன் பகுதி - நான்கு மாதங்கள் கழித்து நியூ ஜெர்சி படேல் பிரதர்ஸில் அவரை சந்தித்தோம். ஒரு சனியன்று அவர் வீட்டில் இருந்து காலை 10 மணி முதல் அவர் வெளியே வரும் வரை  ஒரு இரண்டு மணி நேரம் அந்த ஏரியாவில் சுற்றிக்கொண்டு இருந்தோம்... ( 12 மணிக்கு - முகல் ஹோட்டல் பப்பே - எப்படி மாறுவார்?)

அவரை பார்த்தவுடன்... அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். எப்படியோ பேசி...  நயமாக .... வசூல் பண்ணிட்டார்கள்.  நல்ல வேலை கையில் அவரிடம் செக் புக் இருந்தது.... (கடையில் பணம் செட்டில் செய்ய செக் கொடுக்கலாம்... பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆனால் ஜெயில் கம்பி தான்)

அவருக்கு  கடன் கொடுத்தார்கள் மனவாடுகள் (தெலுகு மக்கள் உதவி செய்யும் மனநிலை - கொஞ்சம் பாசம் அதிகம்) .... நினைத்துப்பருங்கள்... அவர்கள் மனதில் எப்படி இருந்திருக்கும்... இன்றும் கூட தெலுகு மக்கள் தான் அதிகம் அமெரிக்காவில் வாழ்கிறார்கள்... அவர் இனத்தை அங்கு சென்று அமர்த்தும் பணியை செவ்வனே அமீர்பெட் கோச்சிங் சென்டர் மற்றும் டுபாக்கூர் கம்பெனிகள் செய்கின்றன.

இப்போது அவர் இரண்டு பசங்கள் பெற்று நல்ல வாழ்க்கை ... நியூ ஜெர்சி தமிழ் மன்றம் போன்ற செலவு செய்யும் வேலைகளை செய்து சந்தோசமாக இருக்கிறார் என்கிறார்கள். என் ப்ளாக் கூட அவர் படிக்கலாம்... படித்தால் கமண்ட் இடவும்...

மூன்று வருடம் முன் கூட அவரை நியூ ஜெர்சியில் வைத்து பார்த்தேன்... பேசவில்லை.

நானும் அதைப்போன்றே என் நெருங்கிய சகாவிற்கு ஒரு தொகை கொடுத்து, பதினான்கு மாதங்கள் கழித்து வசூல் செய்துள்ளேன்... எல்லாம் எதவாது வழியில் பிற்காலத்தில் உதவுவார் என்று தான்... இதுவரை அவர் செலவில் ஒரு தொலைபேசி கால் கூட இல்லை....

காலம் சுழலும்... இந்த மாதிரி நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்பவும்...



No comments: