Tuesday, March 02, 2010

கிளிஜோசிய அனுபவம்

என் கிளிஜோசிய அனுபவம், ஒன்பது வருடங்களுக்கு முன், மேட்டுப்பாளையம் பத்ரகாளி கோவிலுக்கு ஜூலை சமயம் சென்ற போது...

சும்மா பார்த்தோம்.

கிருஷ்ணர் படம் வந்தது, ஜோசியர் சொன்னார், உங்களுக்கு வீட்டில் ஒரு வருடத்தில் ஆண் பிள்ளை பிறக்கும் என்றார். சொந்த தொழிலும் செய்வீர்கள் என்றார். இரண்டும் நடந்தது.

*

சில சமயம் ஒரு விஷயத்தை ஜோசியர் - எங்கள் பெண் குழந்தை - பராக் அணிந்த குழந்தை - பார்த்து அடுத்து ஆண் குழந்தை என்று சொல்லலாம்.அந்த சமயம் நாங்கள் ஒன்றே போதும் என்று வேறு இருந்தோம். மீண்டும் அமேரிக்கா வேலைக்கு செல்ல ப்லேன் வேறு.... எங்கே போய் சொந்த தொழில்.... என்ன தொழில்?

ஆனால் சொந்த தொழில்? மனதில் கூட இல்லை. சில விஷயங்கள் அனுமாஷ்யமானவை.

இருபது வருடங்களுக்கு மேல் ஜோதிட அனுபவம் உள்ள எனக்கே, இது வியப்பு.

No comments: