Tuesday, February 09, 2010

ஜோதிடத்தின் உபயோகம்

வரும் முன் காப்பது தான ஜோதிடத்தின் முழு பலன், உபயோகம். விழப்போகும் குழி அளவு தெரிந்தால், அதற்கு தகுந்த மாதிரி நீங்கள் தயார் செய்து கொள்வீர்கள் அல்லவா? எந்த காலத்தில் ஒருவரின் முயற்சி அளவு அதிக பலன் கொடுக்கும் என்பதும் ஜோதிடத்தின் உபயோகம். நீங்கள் உங்களை நல்ல நிலையில் தயார் செய்து கொள்வீர்கள்.

பழைய தவறுகளை அலச இது ஒரு சமயம். அதன் காலத்தில் தவறு நேரா வண்ணம், எப்படி தடுப்பது என்பது மனம் சொல்லிக்கொடுக்கும்.

ஜோதிடம் தெரிந்தவர்கள், தங்கள் நேரத்தினை விலை மதிக்க முடியாத அளவு உதவி செய்ய வேண்டும். ஓசியில் டைம் வேஸ்ட் செய்பவர்களை தவிர்க்க பணம் சார்ஜ் செய்வது தவறில்லை. சொந்த அனுபவம்எனக்கு.

ஆனால் சிலர் கல், மாணிக்கம், ருத்திராட்சம் அணிந்தால் பெரிய பணக்காரன் ஆவீர்கள் என்று சொல்வது முட்டாள்தனம்! ( விற்பவர்கள் தான் பணக்காரர் ஆகிறார்கள் ). நம்பிக்கை மட்டும் கொடுத்தால், குறைந்த விலையில் எத்தணை மோதிரம் வேண்டுமானாலும் அணியுங்கள்.

ஊரில் சிக்கன்குனியா இருந்தால், வீட்டில் கொசுவர்த்தி சுருள் , ஹோமியோ மருந்து என்ற நாடுவது போல தான், ஜோதிடத்தை நாட வேண்டும்.

No comments: