Thursday, July 16, 2009

என் காதல் டைரி

நண்பர் திருப்பூர் சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய ஒரு கவிதை...

என் காதல் டைரி

உன் மௌனங்களின் நாராசாரத்தில்
என் ஆழ் நித்திரை பாழ்..
எதிர்ப்படாத நீ தரும் இம்சைகள்
எதிரில் வந்து கத்தியில் குத்தினாலும்
தேவலாம் போன்ற வலிகள்....

எத்தனை மெல்லியவள் நீ...
ஆனால் உன் காதலை வன்முறை போலவே
உணர்கிறது என் மனது..
எனக்கு நீ கிடைக்காத ஏக்கத்தை விட
கிடைக்காமலே போய் விடுவாயோ
என்கிற சந்தேகம் தான் பெரிய கவலை. ....

ஒவ்வொரு இரவிலும் உன் திருமணப்பத்திரிகை
நூல் அஞ்சலில் வருகிறது கனவாய்...
என் பெயர் இல்லாமல் இருக்குமோ என்று அஞ்சியே
அவைகளை என் ஒவ்வொரு கனவிலும்
பிரிப்பதே இல்லை. ...

நீ அமைதியின் ரசிகை என்பதை புரிந்தும் கூட
என் பதற்றங்களை என்னிடமிருந்து ஒழிக்க முடியவில்லை.

நான் உன்னை விரும்பாமல் இருந்திருந்தால் ஒரு சமயம் நீ
என்னை விரும்பியிருப்பாய். ....- அதற்காக உன்னை
விரும்பாமல் இருக்கும் திறன் என் வசமில்லை.

நான் உன்னைக் காதலிக்கிறேன்.. காதலிக்கிறேன்.....
என்னை நீ உதறித்தள்ளுவது பொருட்டே அன்று......

2 comments:

ஷங்கரலிங்கம் said...

நல்ல இருக்குங்க கவிதை. வாழ்த்துக்கள்.

ஷங்கரலிங்கம் said...

இந்த கவிதை கொடுத்த மன உளைச்சலில் ஒரு கதை எழுதியிருக்கேன்...

என் காதலி லதா

படிச்சு கருத்து சொல்லுங்க.