Thursday, July 31, 2008

பயணம் - பிராயாணம்

கூர்ந்து நோக்கும் – என்
மனத்தின் வார்த்தைகள்
வரிகளாய் மாறுகையில்
இறங்கிச்செல்லும் – என்
பயணத்தின் படிகள்

உனக்கான தாகம்
எனக்குள்ளே எப்போதும்
அனாலும்
தேடித் தேடி உண்ணும்
ஆவல் எனக்கில்லை
எனெனில்
உணவும், தேடலும், தாகமும்
நீ தானே

உரத்துச் சொல்லும்
விமர்சனங்களில் – எனக்கு
என்றுமே உடன்பாடில்லை –
என்
சிந்தனைகளைக் கூட
பட்டமாய் பறக்கவிட மட்டுமே ஆசை
கண்ணைக்கவர்வதும்
காற்றிலே அலைவதும்
காண்பவர் கண்களுக்கே விட்டுவிடுவது
மிகப்பெரிய விடுதலை.

மொழி தொலைந்து போனதும்
முகம் மறந்து போனதும்,
மனம் தாண்டி பயணிக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
தடைதாண்டி போகவைக்கும்
படிக்கற்கள்

என்
கற்பனை பிராயாணத்தின்
கடைசி முடிச்சில்
என் தேவைகளின்
முழு பரிணாமமும்

No comments: