Monday, October 31, 2011

காதல் ஒரு பட்டாம்பூச்சி

இதை  தான்  எதிர்பார்த்தேன். ஒரு வேலையும் ஓட மாட்டேன் என்கிறது. ஜீசஸ் காப்பாற்றுவாராக.  

கொஞ்சம் போதையில் இருந்தான்.   காதல்!

சேம்சன் நன்றாக வேலை செய்யக்கூடியவன்... ஒரு பேச்சுக்கு மறு பேச்சு கேட்கமாட்டான்... வேலை முடியும் நிச்சயம்...  கணினி துறையில் இருப்பவர்களுக்கு ஒரு யூனியன் தேவை என்பதில் பிடிவாத கொள்கை கொண்டவன். இன்னும் அதற்கு விடிவில்லை.

அவனுக்கு இப்போது ஒரு காதல் வைரஸ் வந்து துன்புருத்துது  ...  ஒரு ஏஞ்சலாக அவன் மனதில் அலை பாயுது.

அவள்  ராஜி.   கம்பெனியில் கிரிப்டோ ப்ரோக்ரேமர்...  (குறியீட்டு கணினி எழுதுனர்).   அடிக்கடி அவனை கேண்டீனில் சந்திப்பவள்....

அவனுக்கு சளி இருமல் என்றால், விக்ஸ் தருமளவு ஒரு இன்டெரெஸ்ட்.... ஆனாலும் காதல் கத்திரிக்காய்  இல்லை.

 நல்ல பழக்கங்கள் நிறைந்தவன்.   வைனோடு சரி.  ஜீசஸின்  ரத்தம்! அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்த போது லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ ஆல்கஹால் இருக்கும் என்று தெரியாமல் குடித்தவன்... நாபா வேலியில் எல்லாரையும் போல வைன் குடித்தவன்...

ராஜி வீட்டில் அமெரிக்கா மாப்பிள்ளை நிச்சயத்து விட்டார்கள் ... பேர் என்னவோ சண்முகம் ... என்று  கேள்விப்பட்டவுடன் தான் அவனுக்கு உதறல் எடுத்தது....  அவ்ளோ தானா?  அவன் பெரிய சம்பள படிப்பு கிராக்கியா இருக்கும்!

எப்படி இதை தடுப்பது, என் மனைவியாக ஏற்பது? நடக்குமா? மதம் தடுக்குமா?

*****

எப்போதும் போல அமெரிக்க மாப்பிள்ளை என்றதும், சந்தோசமாக இருக்கும் பெண்களை விட அவள், சிறிது வித்தியாசமாக காணப்பட்டாள்...   எப்போதும் ஒரு பதற்றம்...

சோகம் இல்லை.... ஆனால் கண்களில் ஒரு விரட்சி...

சேமசன் - உன்னோடு பேசணும் என்றாள்...  நான்கு மணி டீ ப்ரேக்.

சரி கேண்டீன் போலாம் ராஜி... சேம்சனுக்கு ஒரு குறுகுறுப்பு..  என்னவோ நடக்குது...  இளையராஜாவும், ரஹ்மானுக்கு ஆளுக்கு ஒரு மூலையில் அவன் மூளையில் பி.ஜி.எம் செய்தார்கள்...

அப்போது அவன் செல்போன் அலறியது... என்ன கொடுமையோ...  மேனேஜர் கூபிடுறார்... அஞ்சு நிமிஷத்தில் வர்றேன்.

ராஜி மௌனித்தாள்....  "அப்புறம் க்யுப் பக்கம் வாங்க சேம்! நிச்சயம் பேசணும்!"
 
வர்றேன்...  சேம் விடுபட்டான்...

இருவரும்  அந்த ஷனத்திலிருந்து  விடுபட்டனர்.

*****


ரவி.. மிகவும் ஆஜானுபாகுவான ஆள்... செகூரிடி சாப்ட்வேர் எக்ஸ்பெர்ட்... தொழில் முறையில் எல்லாம் சேமிற்கு சொல்லிக்கொடுத்தவர்.  சேமின் மேனேஜராக இருந்தாலும் ஒரு நண்பராக இருப்பவர்.....

உட்காருப்பா சேம.

லிச்சென் .... நமக்கு ஒரு ரெண்டு பேரை இன்வெஸ்டிகேட் பண்ணனும்.  சேலஞ்சிங் கேஸ். க்யுப்வால்ட் க்ளையன்ட் ரிகுவேஸ்ட் ... உன்னை விட்டால் வேற ஆள் இல்லே. அவங்க சப்போர்ட் பண்ற பேன்க் நெட்வர்கில்  ஹேக் பண்றாங்க.  இப்போ ஒரு மாசத்திலே நானூறு  கிரெடிட் கார்ட்   நம்பர்ஸ் திருடி இந்தியாலே விற்றுவிட்டாங்க....   அவ்வளவு ஈசியா அந்த கம்பெனி கார்டை மிமிக் பண்ணி யூஸ் பண்ண முடியாது. பாஸ்வோர்ட் போக, ஐரிஸ் ஸ்கேன் வேண்டும்.... எல்லாமே இந்தியாலே செலவு ஆகியிருக்கு...  ஐரிஸ் ஸ்கேன் இமேஜிஸ் எடுக்கிறது ரொம்ப கஷ்டம்.  ஒரு பெரிய லாஜிக் செகுவேன்ஸ் இருக்கு. இருந்தாலும் ரெண்டு மில்லியன் செலவு பண்ணியிருக்கான் களவானி ஒருத்தன்... அமெரிக்காவிலே ..  பாஸ்டனில் இருக்கான்.

ரெகுலரா ஹேக் பண்ணின ரெண்டு ஐ.பி. அட்ரெஸ் கிடைச்சது... ஒன்னு.... கிளையன்ட்  கிட்டே வேலை பார்க்கும் ஆள் ஒருத்தன், இன்னொருத்தன் நம்ம கம்பெனி ஆள்.

அவன் பேரு எஸ்.பி.கோகுல் .  அவனுக்கு இந்தியாலே ஒரு ஹெல்பர் ஆள் இருக்கான்... பேரு விஷ்ணுனு தகவல் கிடைச்சிருக்கு...  அந்த பேர்லே நம்ம கம்பெனிலே யாரும் இல்லே... இன்னும் ஒருத்தர் நம்ம  கம்பெனியில்  உள் இருந்து ஹெல்ப் பண்றாங்க... யாருன்னு தெரியாது.

இவெங்க ஹெகிங் நெட்வர்க் சிம்பிளா இருக்கு... ஆனா எப்படி அவன ஐரிஸ் ஸ்கேனை எடுத்தாங்க ...  தெரியலே....  அதை தான் நீ கண்டுபிடிக்கணும்...

இந்த இந்த ரெண்டு ஐ.பி. அட்ரெஸ்... ஒரு காகிதத்தில் குறித்துக்கொடுத்தார்     ரவி... .  எப்படியோ உன் செகூரிடி இன்வெஸ்டிகேடிவ் இன்டலிஜென்ஸ்  இதுக்கு வேலை பார்க்கணும்...

ஓகே சார்.  சேம மனதில் சஞ்சலம்....  சே... எதோ மூடில் இருந்தேன் , இப்போ இது வேற.

சரி சொந்த விஷயம் நிற்கட்டும்.  கம்பெனி வேலை முக்கியம்...

அதில் ஐக்கியமானான்.


******

ஐரிஸ் ஸ்கேன் இமேஜஸ் எங்கே எடுத்திருப்பாங்க?  அந்த கம்பெனி... ஆளே, பேங்கின் நெட்வர்க்கில் இருந்த எடுக்க முடியாதே?   க்யுப்வால்ட் பெரிய கம்பெனி ...

செகூரிடி பாஸ்வர்ட் என்ன?

என்கோடர் சாப்ட்வேர் எழுதினது  ராஜி தானே... கேட்டிடுவோம்.  அவ தான் பேசணும் என்றாளே...  மறந்திட்டோம்....

அவள் க்யுபிற்கு சென்றான்.   சாயந்திரம் ஆறு மணி...  கிளம்பிட்டாளா ?

ராஜி டெஸ்க் மீது  ஒரு செல்போன், சினுங்கிக்கொண்டு இருந்தது. இரண்டு ஸ்லிப் பேப்பர்....

[Savaal%255B3%255D.jpg]

இரண்டு ஸ்லிப்புகள்...  எதற்கு ராஜி டெஸ்கில்?

ஒன்று ...  விஷ்ணு  யாருக்கோ Sir  போட்டு எழுதிய மெயில்.... snippet .  யார் அந்த சார்?

இன்னொன்று ...      விஷ்ணு கோகுலுக்கு எழுதிய மெயில் ... குறியீடு? பாஸ்வர்டுடன்...

சேமுக்கு புரிந்தது...  அது தான் அந்த ஐரிஸ் ஸ்கேன் இமேஜஸ் க்யுப்வால்டின் பாஸ்வர்ட்...  இல்லாவிட்டால்  வேறு ஒரு அக்கவண்டின்   பாஸ்வர்ட்? குழம்பியது...


மீண்டும் செல்போன் சிணுங்கியது....


அப்போது... ராஜி வந்தாள்... செல்லை அணைத்தாள்.

சேம்... எல்லாமே சொல்லிடறேன்....  நீ தான் என்னை காப்பாத்தணும் ....  அதை பத்தி பேச தான் உன்னை கேண்டீனுக்கு கூப்பிட்டேன்....

*****

சொல்லு...  சேம் மவுனத்தில் ஆழ்ந்தான்...

ராஜி சொல்ல ஆரம்பித்தாள்.

பாஸ்டனில் இருக்கும் எஸ்.பி.கோகுல்  தான் என் பியான்சே.  யாருக்கும் நான் அவர் முழு பேரை சொல்லலே. சண்முகம் என்றே சொன்னேன். சண்முக பிரசாத் கோகுல்.  அவர் அந்த அமெரிக்க பேங்கின் ஐ.டி. டேபார்ட்மேண்டில்  சீனியர் ப்ரோக்ராமர்.

நிச்சயம் பண்ணினவுடன், அவர் அமெரிக்க போயிட்டார் போனில் பேசி பழகினோம்.

ஒரு நாள் கூப்பிட்டார் ..     அவர் ஒரு ஆபத்தில் மாட்டிகிட்டதாகவும் ... அவரோட சிஸ்டம் பாஸ்வர்டை யாரோ ஹேக் பண்ணி, க்யுப்வால்டை திறத்து நானூறு ஐரிஸ் ஸ்கேன் இமேஜசை, கார்ட்  டிடேயில்சை  எடுத்திட்டாங்க... இந்தியாலே 2 மில்லயன் டாலர் அளவு செலவு பாண்ணியிருகாங்க...

பொறி வைத்து பிடிக்கணும்னு அவர் விஷ்ணுங்கிற  இன்பார்மரை கண்டுபிடித்தார்...  அந்த விஷ்ணு வேற யாரும் இல்லே ... நம்ம ப்ரோக்ரேமர்  ராமு தான் அது. அது ஒரு நிக் நேம். யாரோ ஒரு பெங்காலிக்கு கார்டு டீடெயில்ஸ்   இமேஜ் வால்ட் பாஸ்வர்டோட மாற்றி விற்றிருக்கான். அதனாலே தான் கோகுலாலே அந்த வாலட்டை கொஞ்ச நாள் அக்சஸ் பண்ண முடியலே. அது அவர் என்னை பெண் பார்க்க இந்திய வந்த நேரம்.

நான் தான் ராமு கிட்டே பேசி, அந்த பாஸ்வர்டை வாங்கி கொடுத்தேன். அதுலேயும் டபுள் க்ராஸ் பண்ணியிருக்கான் ராமு....  அந்த மெயிலை நான் பார்த்துட்டேன் ... பிரிண்ட் பண்ணி உன்கிட்டே காட்டி ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்... நீ கால் வந்து பிசியாயிட்டே...


இப்போ என்ன பண்றது சேம்... கோகுலை காப்பாற்றனும் . ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்....

*****

இப்படி தான்  வாழ்க்கை போகனுமா... ?

சேம்  உற்று பார்த்தான்...... சரி ராஜி.... எப்படியோ உன் சண்முகத்தை காப்பாத்துறேன் ...  இது உன்மேலே நான் வச்சிருந்து காதலாலே... ஆனா உன்னை என்னாலே  எப்பவோம் மறக்க முடியாது..

அவன் கண்களில் கண்ணீர்....  காதல் என்ற கத்திரிக்காய் பண்ணிய விளையாட்டு ...

எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும். காதலுக்கு இது ஒரு மரியாதை.

மங்கிய வெளிச்சத்தில்  ஜன்னல் வெளியே ஒரு பட்டாம்பூச்சி பறந்து சென்றது.

அது தான் காதலா?


*****

சில நாட்கள் கழித்து சேம்சன் இன்வெஸ்டிகேட் செய்து, அந்த வெளிநாட்டு கும்பலை அடையாளம் காண உதவி செய்தான்.

கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது.

கோகுலும் ராஜியோடு தன கல்யாண வாழ்க்கையை சந்தோசமாக கழிக்க ஆரம்பித்தான்.

சேம்சன் மனதில் தான் இனம் புரியாத விரக்தி. அவன் அப்பா அம்மா பார்த்த பெண்ணை மனம் முடித்து, வாழ்க்கையை ஒவ்வொரு படியாக அனுபவித்து வாழ்ந்தான்.

 இப்படியாக கதை முற்று பெறுகிறது.

7 comments:

Unknown said...

நல்ல இருக்கு....வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

ஷைலஜா said...

வெண்புரவி பதிவுபார்த்து இங்க வந்தேன் பட்டாம்பூச்சி அருமையாவும் இருக்கு அழகாகவும்....வாழ்த்துகள்!

நம்பிக்கைபாண்டியன் said...

புதிய கோணத்தில் நல்ல முயற்ச்சி, முடிவை இன்னும் நல்லா சொல்லிருக்கலாம், வாழ்த்துக்கள்!

Unknown said...

சமீபத்திய உண்மை சம்பவத்தின் தழுவல் போல ..அதில் காதலைக் கோர்த்து, டபாய்ச்சிருக்கே நண்பா..வாழ்த்துக்கள்..

கார்த்திகை said...

உங்களது படிச்சேன். பிடிச்சது. அப்படியே என்னுடயதையும் படித்து கருத்து போடவும். இரண்டு பேரும் வெற்றி பெற வாழ்த்துகள். http://karthiguy.blogspot.com/2011/10/2011.html

middleclassmadhavi said...

Different story! Very nice; Congrats!

bigilu said...

வாழ்த்துக்கள்..

//காதல் என்ற கத்திரிக்காய் பண்ணிய விளையாட்டு // - நச்.. நச்...


//கணினி துறையில் இருப்பவர்களுக்கு ஒரு யூனியன் தேவை என்பதில் பிடிவாத கொள்கை கொண்டவ// - ஆமாங்க.. ஒரு யூனியன் தேவை