Friday, May 08, 2009

எழுத்துப்பணி

எழுத்துப்பணி இரு வகை... ஜனரஞ்சகம் மற்றும் மாற்று பாணி. இரண்டிலும் வாசகர் பார்வைக்கு தான் (வேண்டி விரும்பி செல்கிறது).

இருபத்தைந்து வருடம் முன்னாள், ராஜேஷ்குமார், சுபா போன்றோர் எழுதும் க்ரைம் நாவல்கள் விடாமல் படித்தேன். சுஜாதா பின் ஒரு தாக்குதல் ஏற்படுத்தினார். கம்ப்யுட்டர் துறை பற்றி விரிவாக அவர் எழுதியது, நான் எட்டாம் வகுப்பு படித்த சமயம் 1981 - 82.

சிலர் எழுத்தார்கள், எதோ எழுத வேண்டும் என்று எழுதுகிறார்கள். சிலர், வாசகர் திருப்திக்காக எழுதுகிறார்கள்.

நான் எழுதும் வகை, என் மன அலைகளை சொல்லும் விதம்...

பகிர்வுகள்...

இப்போது சில காரணங்களினால், நிறைய நேரம் ( கட்டுகோப்பாக செலவு செய்ய முடியவில்லை ) உள்ளது...

நல்லபடியாக சில பகிர்வுகளை தொடரவேண்டும் என்பது ஆவல்.

எல்லோருக்கும் பிடித்த மாதிரி எழுதும் ஜனரஞ்சக படைப்புக்கள், வார பத்திரிக்கையில் தான் வருகின்றனவே.

இணையத்தில் ஷொர்ட் அண்ட் ஸ்வீட் பத்தி எழுத்துக்கள் தான் பிரபலம்.

1 comment:

ஷண்முகப்ரியன் said...

எழுதுங்கள் விஜய்.காத்திருக்கிறேன்,படிக்க.