Thursday, May 07, 2009

உங்கள் கவிதைகள்

திரு. மனுஷ்யபுத்திரன்

உங்கள் கவிதைகள் ஐந்து ஒரு தளத்தில் படித்தேன். நன்று. ஒரு அனுமாச்ய அமைதி எற்படுதியிருப்பவை அவை. நான் 1989 சமயம், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில், மண்டைக்காட்டு கலவரங்கள் பற்றி எழுதி பரிசு பெற்றது ஞாபகம் வந்து நிற்கின்றது...

எனக்கு புரியாத விஷயம்... தமிழ் பேசும் ஒரே உறவு காரணமாக, ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு சப்போர்ட் செய்வது கொஞ்சம் அபத்தமாக இருக்குது. அதை வைத்து பெரும் விசயமாக அரசியல் செய்வது, அதை விட அபத்தம்.  வருத்தமாக இருக்குது. நம் வீடு, நம் நாடு என்று பார்த்து, ஒரு நிலை அடைந்த பின், மற்றவர்களுக்கு அனுதாபப்படுவது தான் உலக நியதி.

ஒரு உதாரணம், விமானத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டால் முதலில் நீங்கள் மாஸ்க்கை அணிந்துக்கொண்டு தான், பிறகு குழந்தைக்கு அணிவிக்க வேண்டும் என்கிறது ஆவணம்...

இன்னொரு உதாரணம், மலையேறுகிறார்கள் இருவர். எவரெஸ்ட் உச்சி அடைய ஒரு நிமிடம் இருக்கும் தருவாயில், ஒருவன் அவனது தவறால் கிழே விழ எத்தனிக்க, அவனை காப்பாற்றுவது நியாயமா, இல்லை இலக்கை எட்டுவது மனு நீதி தர்மமா? இல்லை அப்படியே காப்பாற்றினாலும், மலையேறும் சாஸ்திரப்படி, இருவர் எடையை ஒரு கயிறு தாங்காது... முயற்சி தேவையில்லை.

மேற்கூறிய சிறு கூற்று இப்போது நடக்கும் இலங்கை நிலைக்கும் பொருந்தும்.

ஆணவம், மக்கள் பணம் சூறையாடல் ( எதற்கு வேண்டும் பங்க்கரில் நீச்சல் குளம்? ) , போதை மருந்து கடத்தல், ஆள் கடத்தல் ( அசைலம் கேசுகள் ) , மகனுக்கு தலைமை பதவி... இப்படியிருக்கும் ஒரு வஞ்சக கூட்டம் தான் அவர்களுக்கு தீர்வா?

நார்வே மூலம், குறைந்த பட்சம், ஒரு மாநில அந்தஸ்து ( சுய ஆட்சி ) கிடைத்திருக்கும் வாய்ப்பையும் இழந்து தவிக்கின்றனர் தமிழர், அங்கு.

இப்போது இருக்கும் நிலைமை, அங்கு உள்நாட்டு பிரச்சனையை என்று காரணம், வேறு எந்த நாடும், தட்டி கேட்க்க முடியாது... அங்குள்ளவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்பது தான் பெரும் விஷயம் ஆகிறது.. ராஜபக்சே செய்வது நியாயம் இல்லை. பிணைக்கைதிகளை ( பரிதாப மக்களை ) பிடித்து வைத்திருக்கும் கூட்டம் செய்வதும் நியாயம் இல்லை.

மற்ற நாட்டில் ( கனடா, யுரோப் மற்றும் மலேசியா - சிங்கப்பூரை தவிர்த்து..) இருக்கும் தமிழரின் நிலைமையும் பரிதாபத்துக்குரியது...

--
நன்றி
விஜயஷங்கர்
பெங்களூர்

No comments: