Wednesday, March 30, 2016

என் அறிவிப்பு

என்  அறிவிப்பு

எவ்வளோவோ முயன்றும் இதுவரை ஒரு நிரந்தர வேலை கிடைத்தப்பாடில்லை.

சொந்தமாக இதுவரை 2008 முதல் பல தொழில் (மென்பொருட்கள்) செய்து ஒன்றில் அதிகம் லாபமும், இரண்டில் சம்பளமும், மற்றவற்றில் எக்ஸ்பீரியன்சும் தான் மிச்சம். 

மொத்தமாக ஒரு ரிடயர்ட் மனநிலையில் 40 வயது முதல் இருக்கிறேன். 

சொந்த தொழில் செய்ய வேண்டி இருந்த மோகம் தான் (அதிகம் காசு கிடைக்குமே!) எவனுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற எண்ணமும் கூட. (இது என் பிரச்சனைக்கு பதில் அல்ல).

என்னிடம் இருக்கும் எச்க்ச்பீரியன்ஸ் ஏன் உதவவில்லை என்பது தெரியவில்லை.

குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதால் , அதிகம் வேண்டி இருக்கும் சிலருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை அறிவேன்.

நானோ கொடுப்பதை கொடுங்கள் என்கிறேன்.

நண்பர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. ஒருவன் உங்களிடம் தான் காசு உள்ளதே. இருக்கும் வரை என்ஜாய் பண்ணு என்கிறான்.

நானும் யாருக்கும் உதவும் நிலையில் இல்லை. இருந்த வாடகை ஆபிசும் 2015 அக்டோபரோடு கொடுத்தாச்சு. தேவையில்லாமல் கைக்காசு போனது.

நான் வேலை கொடுத்து எக்ஸ்பீரியன்ஸ் நிறைத்து, அமெரிக்காவிற்கு அனுப்பியவர்கள் எல்லாம் இப்போது நன்றாக செட்டில் ஆகியுள்ளனர். 

அவர்கள் மூலம் உதவி ஒன்றும் கிடைக்கவில்லை. அவர்கள் வேலை செய்த விவரம் விசாரிக்க யாரவது கூப்பிடுவார்கள் நடுநிசியில் - அதையும் பொறுத்துக்கொண்டு விபரம் கொடுக்கிறேன்.

இதுவரை நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் பல லட்சம் கடன் வாங்கியுள்ளேன் - தொழில் மீது தான். தனிப்பட்ட முறையில் கொடுத்தவர்களுக்கு திருப்பிக்கொடுப்பேன் ... ஸ்டாக் ரிஸ்க் என்று தெரிந்தும் ஒருவர் 15 லட்சம் கொடுத்தார். அசலாவது கொடுக்க எண்ணம்.

 வேலை என்று ஒன்று கிடைத்தால் நலம்.

 மிகவும் போர் அடிக்கிறது.

 தனியாக எதோ டெவலப் செய்கிறேன். அதுவும் போர் தான். என்ன செய்ய?

 உதவ முடிந்தவர்கள் தனி மடலில் தெரிவிக்கவும்.

vijayashankar.india @ gmail

 

No comments: