Monday, September 21, 2015

வினாயகர் கவசம்


 வினாயகர் கவசம்
 ****************
வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!
வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்
மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற
நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!
புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!

கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!
தால் அங்கணக்கீரிடர் காக்க!
நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாசபாணி காக்க!
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க!
காமருபூ முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!
அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!
விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!
தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!
இருபதம் ஏகதந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க!
கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!
கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென்னாசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!
விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ் உதீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!
ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!
மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,
குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,
தானியம், கிரகம், மனைவி, மைந்தர், பயில்
நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!
காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்
சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!
வென்றி,சீவிதம் கபிலர் காக்க!
கரியாதியெலாம் விகடர் காக்க!
என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,
நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,
அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்
தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

No comments: