Sunday, June 14, 2015

மனைவி

சில சமயங்களில் மனைவி என்பவரை சிலர் பிடிக்காமல் கல்யாணம் கட்டுகிறார்கள். எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது...

சில நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ கழித்து சில விசயங்களில் பிடித்து தான் போகிறது. வாழ்க்கை என்ற வட்டம் வெறுமை இல்லாமல் கழிகிறது.

தூங்காத விழிகள் ரெண்டு... தூங்காத கண் நின்று ஒன்று... 

துணை ஒன்று நின்று தாங்காத மனம் இங்கு ஏது?

மனைவி ஒரு வரம் என்பதை கவிஞர் எப்படி ரசித்து எழுதியிருக்கார்?

கடவுள் வேண்டியிருக்கிறார், அதனால் தான் குழந்தைகள் கடவுளின் ஆசையை நிறைவேற்றுகின்றன.
வேலை இல்லாமல் இருப்பது மாதிரி ஒரு கொடுமையான வேலை வேறு ஒன்றும் இல்லை.
செய்யும் வேலைக்கு, பொங்கல் வேண்டுமா என்று முதுகில் பொங்கல் வைத்திருப்பார் மனைவி!

200 கொடுத்தா ஆப்பில் ஜூஸ், 500 கொடுத்தா பாயாசமா... தங்கவேல் வசனம் ஒரு வாழ்க்கை பாடம்.
 
என் மனைவியின் அக்கா  பையன் தமிழில் 80 மார்க் பத்தாவதில் எடுத்தவன், பிரெஞ்சில் 196 வாங்கியுள்ளான். என் குழந்தைகளும் கன்னடா படித்தவர்கள் இப்போது பிரெஞ்ச் படிக்கிறார்கள்.

மாப்பிள்ளை தேடும் சமயம்,சுமாராக இருந்தாலும் பரவாயில்லை, அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளை என்றால் பெண்கள் அவர்களையே ஓகே செய்கிறார்கள்.

அமெரிக்காவில் எல்லாம் சந்தோசம் என்ற மனக்கணக்கு தான்.

அமெரிக்காவில் குறை ஒன்று சொல்லாமல் வீட்டு வேலைகள் அனைத்தும் செய்கிறார்கள்.

இந்தியா வந்தவுடன், வீடு வேலைக்கு ஆள்.. அயர்ன் பண்ண ஆள் என்று லிஸ்ட் நீண்டுக்கொண்டு போகிறது. பேன்கள் துடைக்க வேலை ஆட்கள் தனி சார்ஜ் வாங்குறாங்க.

 


No comments: