Saturday, November 05, 2011

Flask on mail, Indiaplaza

Recently I fell for an online offering... Flask on mail, from Indiaplaza  (click to visit that offer page)

Stainless Steel Vacuum Flask
The cost 99 plus shipping 29. ( rupees )



What I got?

Made in China stuff. Yuk.

Dented stuff.  (on the cap.)

Also it is not 750 ml as advertised. It is about 150 ml only.

Did it work?

Poured hot water in the night and kept .... early morning checked to find that the water was lukewarm. So the verdict - might work. Short time.


Never buy such stuff online!

கவிதை எழுதுவது

அமைச்சர்கள் மாற்றம். என் ப்ரேரோகேடிவ் . அம்மா. இல்லேன்னா சும்மா.  #கவிதை

கிரிக்கெட் இல்லாவிட்டால் கிட்டிப்புல். இருக்கவே இருக்கு குப்பம். ஆந்திரா!  #கவிதை

எழுதுவது என் ப்ரேரோகேடிவ். படிப்பது உங்களுடையது. சமநிலை. #கவிதை

முடியும் என்பார்கள். ஆனால் முடியாது. காசு இருக்காது. கட்சி நடத்துவது கஷ்டம். #கவிதை

எழுதுகிறேன் கவிதை!

என் கவிதையை
நான்
நன்றாக எழுதுகிறேன்
என்ற
நம்பிக்கை
எனக்கு இருக்கு.


Jesus, My Father, The CIA, and Me

This is a book review of the book "Jesus, My Father, The CIA, and Me"

The book has a fast start. Wonderful.
This captures the vivid imagination of the author.

This is more of a human journey, that takes on life as it comes along.

Wonderful nature of the book - vivid description in simple language. 

There is lot of humor in this book. It begins by saying, it a sort of Memoirs...


Lovely read.

No He Can't

This is supposed to be a Book review of No He Can't, which I have not received from Book Sneeze.

I hope they would have shipped it to my address. But have not recieved it yet.

No idea, when they have sent it. Nor there is a way to track the shipping.

I hope they can send the e-book to review it fast.

What to do? I cannot review any other books till they send it.

Hence this post.

I would post some review links. May be that would help?


On 11/4 Ender Salvatore wrote: Book Description:Nationally syndicated radio talk show host and columnist Kevin McCullough tackles the thorny issue of why the audacity of hope is not found in the current path that President Barack Obama has laid.As the first pundit in the world to predict that President Barack Obama would become ... Kevin McCullough - "No He Can't"
Ender Salvatore's Rating:
1 Stars
On 11/2 Rick Hogaboam wrote: Kevin McCullough predicted the rise of Barack Obama before he was taken seriously as a presidential candidate. He followed Obama early on in his career as a community organizer in Chicago and predicted in 2006 that he would be a major player in the 2008 elections. McCullough lists some factors contributing ... No He Can't Breeds More Cynicism
Rick's Rating:
3 Stars
On 10/26 Mary Pursselley wrote: How Barack Obama is Dismantling Hope and ChangeBy Kevin McCulloughWhen I first began reading this book, I was half-way expecting just another rant and rave political commentary. I was pleasantly surprised to find that I was wrong. No He Can't is far from being a mere commentary telling Americans how ... Book Review: No He Can't
Mary 's Rating:
4 Stars
On 10/7 tdot wrote: First of all, the title, which is meant to be a catchy and funny take on President Obama’s election slogan, was to me, just really cheesy and not very tactful. Immediately we know the direction of the book, because former Republican governor and Fox News contributor, Mike Huckabee, wrote the foreword. ... Book Review: No He Can’t
3 Stars 

Friday, November 04, 2011

குழப்பங்கள்

ஒருவர் மனதில் எவ்வளவு குழப்பங்கள் மற்றும் எண்ணங்கள் இருக்கும் என்பது கீழ் இருக்கும் வார்த்தை கலவைகளை படித்தால் தெரியும். இருந்தாலும் ஒரு நாவல் ( நெடுங்கதை ) படித்த திருப்தி இருக்கும்...

*****

இரண்டு பாகிஸ்தானிய கிரிகட்டையர்கள்... கில்டியாம். பாவம். நாடு கடத்தப்படுவார்களா? மீண்டும் பாகிஸ்தானுக்கு. ஐயோ பாவம்.

மூன்று வார்த்தைகள்.

இந்த வருடம் அவளிடம் நிச்சயம் சொல்லிவிட வேண்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.   #யாருக்கோ #ஹைக்கூ.
பெண்களை கிண்டல் செய்து எழுதினால் பெயரை நார வைத்து விடுவார்கள்... பூ கதை உதாரணம். ( நிஜ பெண்ணாக இருந்தால்... )

இந்த பதிவை எழுதியவர் இவர் தான் என்று தோணுது.  டிவிட்டரில் வரும் வார்த்தைக்கோர்வைகள்  அப்பழுக்கு இல்லாமல் அப்படியே இருக்கு...

என்னிடம் சில கான்றேக்டர்ஸ் இருக்காங்க. அப்படி வேலை பண்ணுவாங்க. பெரிய லெவலில் ஐகேட் பேட்னியை கேட்கலாம். சிறு கம்பெனிகளுக்கும் வேலை உண்டு.

லைட்டு  போட்டாலும் வித்தியாசம் தெரியாது.

புத்தகம்  படிப்பதால் , குழந்தைகள்  நோய்கள்  தீருமா ? அம்மா  கேட்குறாங்க .  கருணாநிதி கட்டிய சொந்த வீட்டை தவிர அனைத்தும் ஆண்டி மேடம் ஆகுமா?

அணைத்து சினிமா அரங்குகளும் மருத்துவமனை ஆக்கப்படும். எல்லாவற்றிற்கும் போதி தருமா ஆஸ்பத்திரி என்ற பெயர் வைக்கவ்ப்படும்.

தமிழ்நாடு மந்திரிகள் பெங்களூரு செல்ல தடை விதிக்கப்படும்.  நாங்க எதுக்கு அங்கே வரணும்?

பிறந்த அத்தனை குழந்தைகளையும் அம்மா கட்சி தத்து எடுத்து டாக்டராகவோ கணினி பொறியாளராகவோ ஆக்கும்.

எப்படி  தான்  தாம் உயர்ந்த  ஜாதி என்று காட்டுவதாம்?  சட்டில் ரேபெரன்ஸ்.

கம்பெனியில் இருக்கும் எல்லோரும் அப்படி நடந்துக்கொண்டால் என்ன செய்வதாம்?

உலகத்தின் பெரிய நாய் உங்கள் ஊரில் இருக்குதாம். டிஸ்கவரி  சேனலில் பார்த்தேன்.

இன்றும் பெர்சனல் லோன் வேண்டுமா என்று கேட்டு ஆட்கள் கூப்பிடுறாங்க...  லஞ்சு சாப்பிடும் சமயம்.


எடுக்க முடியாததை பிரித்து கொடுங்கள். நிறைய பேர் ப்ரோஜெக்ட்ஸ்  தேவை என்று இருக்காங்க. சக்சஸ்ஸை பொருத்து பேமண்ட்ஸ்  என்று வைக்கலாம்.

இன்று அநேகல்லில் மகனோடு மணி நேரம் கிரிக்கெட் ஆட்டம்.  பந்து பொருக்கி கை காலெல்லாம் வலி.   மதிய உணவு ராகவேந்திரா மெஸ்ஸில். அருமை. ரூ 20 சாப்பாடு.

மேனேஜராக  இருப்பது எப்படி என்கிற புத்தகம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.  ஒரு லிங்க் அனுப்பினேன். பார்த்தீங்களா?

இம்போர்ட் டேக்ஸ் எவ்வளோ கட்டனும் ஆர்டர் பண்ணினால்  ?   நீங்கள் நண்பர் மூலம் வாங்கியது தெரியும்.

இங்களிடம் வேலை பார்த்த ஒருவர், உங்களுக்கு மேனேஜர் ஆகும் நிலைமை எப்படி? எனக்கு பிசினஸ் பார்ட்னர் ஆனவர்கள் நிறைய பேர் உண்டு.  நன்று.

Wednesday, November 02, 2011

காலத்தின் கேடு

சோசியல் நெட்வர்க் என்று மக்கள் ஒட்டிக்கொண்டு டைம் வேஸ்ட் பண்றாங்க... இது  ஒரு மாயவலை.  காலத்தின் கேடு.  ராமன் ஒவ்வொரு நண்பரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தான்.

அவன் வேலை செய்யும் ஐ.டி. துறை அப்படி.

எங்கு பார்த்தாலும் மொபயிலிலோ அல்லது லேப்டாபிலோ ஏதாவது நெட்வர்க்கில் எதாவது தட்டச்சு செய்து தங்கள் உணர்வுகளை பதித்துக்கொண்டு இருப்பார்கள். சில பாவப்பட்ட ஜனங்கள், பெண் பெயரில் எழுதும் ஆண்களை நம்பி, வேலை செய்யாமல் அவர்கள் மேனேஜர்களிடம் ( டேமேஜர்கள் என்பார்கள் ) திட்டு வாங்கிக்கொண்டு லேட்டாக வேலையை முடிப்பார்கள்!

ராமன் அந்த கூட்டத்தை சேராமல், தன வேலை மட்டும் செய்துக்கொண்டு இருப்பவன்.  வெட்டுக்கு சென்றாலும் மனைவி, மகள் என்று நின்றுவிடும் அவன் உலகம். அவர்கள் இருவரை சுற்றியே அவன் வாழ்க்கை பாதை அமைந்தது. ஒன்பது வருடங்கள் ஆகியிருந்தது அவர்கள் திருமணம் நடந்து, சாட்சியாக எட்டு வயது மகள் வர்ஷினி... அதிகமாக பீஸ் வாங்கிக்கொண்டு அரைகுறையாக பாடம் நடத்தும் ஒரு ஆங்கில வழி பள்ளியில் மூன்றாம் வகுப்பில் இருந்தாள்.  

அவர்கள் வாழ்ந்தது மயிலாப்பூர் ஏரியாவில் ஒரு இரண்டு பெட்ரூம் அபார்ட்மென்ட். மனைவியின் கடவுள் பக்தி அதிகம் என்பதால், டைடல் பார்க் சென்று வர தூரம் அதிகமென்றாலும் கோவில்கள் இருக்கும் ஏரியாவில் வீடு தேடினான். அவர்கள் விருப்பம் மாதிரியே அளவான விலையில் அந்த வீடு கிடைத்தது. நல்ல நண்பர்களும், உதவும் மனப்பான்மையோடு இருக்கும் மனிதர்கள் இருக்கும் ஏரியா எனபதை அவன் அபார்ட்மென்ட் பறை சாற்றியது .

எப்போதாவது கோவையிலிருந்து சென்னைக்கு வரும் அவள் பெற்றோரே அவளுக்கு விருந்தினர்.  வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற விருப்பத்திற்கு மாறாக சென்னையிலே இருந்துவிட்டபடியால்,  பொள்ளாச்சியில் இருக்கும் அவன் பெற்றோர் அவன் வீட்டுக்கு அதிகம் வந்து செல்வதில்லை. "உனக்கு எதுக்குடா அவ்வளவு செலவு செஞ்சு படிக்க வச்சோம்? அமெரிக்காவிலே இருக்க வேண்டியது தானே? இங்கிருந்து என்னத்த கண்டே... " என்று நொந்துக்கொண்டார்கள்.  இதற்கும் அவன் தங்கைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து தான் அவன் செலவில் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

*****

ஒரு நாள் மதியம் அவனை அவன் மனைவி ஜானகி அவசரமாக அழைத்தாள்... "உடனே வாங்க, ஸ்கூலில் வர்ஷினி மயங்கி விழுந்திட்டா... நான் அவளை காலீஸ்வராலே  அட்மிட் பண்ணியிருக்கேன்.  ... "  விம்மினாள்.

கிடக்குறது வேலை என்று அவன் மேனேஜரிடம் சொல்லிவிட்டு, விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தான். ஒரே மகள். போதும் என்று பொத்தி பொத்தி வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆயிற்றே.

வர்ஷினி சோகமாக படுத்துக்கொண்டு இருந்தாள். பக்கத்தில் ஜானகி தேற்றிக்கொண்டு இருந்தாள்.

டாக்டர்கள் பல வித டெஸ்ட்கள் செய்தார்கள். அவன் கம்பெனி மெடிகல் இன்சூரன்ஸ் இருந்ததால் கவலை இல்லை. இருந்தாலும் குழந்தை நன்றாக வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான். 

வேலை பயம். போன் கால்கள் வந்த வண்ணம்  இருந்தன. அடிக்கடி சிறு ஈமெயில்கள் அனுப்ப வேண்டி இருந்தது....

டயபடிக்ஸ் ஆக இருக்கும் என்று சந்தேகித்தார்கள் டாக்டர்ஸ். பல வித டெஸ்ட் முடிவுகள் ஒன்றுமே தெளிவாக இல்லை.

"சரி அப்போல்லோ போய் ஒரு செகண்ட் ஒபினியன் எடுத்திடுவோம்... " வர்ஷினி மிகவும் மயக்கமான நிலையில் இருந்தாள்.  "இரு டாக்டரோடு பேசி பார்த்திடுவோம் ஜானு.. " அவன் குரல் கம்மியது.

அந்த மூன்று மாடி மிடில்க்லாஸ் ஆஸ்பத்திரியின் டாக்டர் ரூமை நோக்கி நடந்தான்.

டாக்டர் காமேஷ் அவனோடு பேசினார். 

"மிஸ்டர் ராமன், வர்ஷினிக்கு க்ளுகோஸ் லெவல் இறங்கவே இல்லே. கவலைப்படவேண்டாம்... நானும் இங்கிருக்கிறே  பல பெரிய ஆஸ்பிடல்ஸ்லே வேலை செய்யும் என் நண்பர்கள் மூலம், இந்த வித்தியாச காய்ச்சல் பற்றி விசாரிசிருக்கேன்... நாங்களும் முயற்சி பண்றோம்... மனசு தளராதீங்க... ப்ளீஸ். ".

ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை.  "டாக்டர் அப்படி என்ன புதுசா... உங்களுக்கு தெரியலைனா யாரை தான் கேட்பது?"  கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்தது அவனுக்கு.

அவன் தோல் மீது கை வைத்து டாக்டர் காமேஷ் தேற்றி விட்டு சென்றார்.

*****

விஷயம் கேள்விப்பட தங்கை சுமித்ரா அமெரிக்காவில் இருந்து தொலைபேசினாள். விவரம் எல்லாம் சொல்லிய அவன், யாராவது அங்கு வர்ஷினி கேசை பற்றி விசாரித்து விவரம் கொடுக்க முடியுமா என்று கேட்டான்...

"இமெயில் பண்றேன்".. என்றவாறு.. டாக்டர் ஆபிசை நோக்கி தந்தான். "டாக்டர் தங்கைக்கு விவரம் அனுப்பினால் எதாவது ஹெல்ப் அமெரிக்காவில் இருந்து கிடைக்கலாம்... "

"பெங்களூரில் டிஸ்டன்ட் மெடிகல் ஹிஸ்டரி டேடாபேஸ் வைத்து நடத்தும் என் இன்டர்நெட் கம்பெனி நண்பர் விஜயிடம் உங்கள் மகள் கேஸ் ஹிஸ்டரி, பேர் விவரம் இல்லாமல், அனானிமஸா போட சொல்லி கேட்டிருக்கேன். அதை பார்த்து யாரவது நிச்சயமா விவரம் கொடுப்பாங்க... இன்டர்நெட்டின் பலம் உங்களுக்கு தெரியாததா... "

" ஆமாம் டாக்டர். ட்ரை பண்ணுங்க. அந்த சைட் கேஸ் நம்பர் கொடுங்க. தங்கைக்கு அனுபுறேன். அவள் டாக்டர்ஸ் ப்ரெண்ட்ஸ் விசாரித்து சொல்றேன் என்று சொல்லியிருக்காங்க...". அழுகையாக வந்தது... 

ரூமிற்கு வந்த அவன்,  வர்ஷினிக்கு பக்கத்தில் ஜானகி மிகுந்த சோகத்தில் இருந்தாள் பார்த்து மேலும் கண் கலங்கினான். "சே என்ன வாழ்க்கையடா  இது... "... மனசு விம்மியது.

"ஜானு டாக்டர் டீடெயில்ஸ் கொடுத்திருக்கார். சுமித்ராவுக்கு அனுப்புறேன். ப்ரெண்ட்ஸ் கிட்டே கொடுக்கிறேன். யாரவது ட்ரீட்மென்ட் டீடெயில்ஸ்   கொடுப்பாங்க...  வர்ஷுக்கு ஒன்னும் ஆகாது.."

டாக்டர் காமேஷ் விவரம் கொடுத்ததை அவன் தங்கைக்கு மெயில் செய்தான். நெருங்கிய நண்பர்களிடமும் சொன்னான்.  "பயப்படாதே... ராமன் " என்று ஆறுதல் கூறினார்கள். " விவரம் கிடைத்தவுடன் நிச்சயம் அனுப்புறோம் ... " என்று அவன் மனதை தேற்றினார்கள்.
இரவெல்லாம் தூக்கமில்லை அவனுக்கு.  வர்ஷிணியும் காய்ச்சலால் விட்டு விட்டு எழுந்துக்கொண்டு இருந்தாள். 

அதிகாலை ஐந்து மணி அளவில், சுமித்ரா ட்ரென்டனில் இருந்து தொலைபேசினாள். "அண்ணா வர்ஷினிக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லே. கோகோ கேன்டியாசிஸ் அமீபையோசிஸ் வைரஸ் தான் தாக்கி இருக்கும் என்று சொல்றாங்க இங்கே ஒரு டாக்டர். ஈமெயிலே எல்லா விவரமும் அனுப்பி இருக்கேன். அதை டாக்டர் கிட்டே கொடுத்திடுங்க... கவலைப்படாதே.. "


 "தேங்க்ஸ் சுமித்ரா...  டாக்டர் என்ன சொல்றார்னு திருப்பி மெயில் பண்றேன்... "  ராமனுக்கு ஒரு வித மகிழ்ச்சி எண்ணம் வந்தது.

 ****

உடனடியாக டாக்டர் காமேஷ் அந்த இமெயில் விவரங்களையும், மற்ற டாக்டர்களோடு பேசி, உடனடியாக அந்த வைரசுக்கு தகுந்த ஆண்டிபயாடிக் கொடுக்க ஆரம்பித்தனர்.  சந்தேகங்களை, விவரம் கொடுத்த பீடியாட்ரிக் ஸ்பெசலிஸ்ட் மூலம் தீர்த்துக்கொண்டு ட்ரீட்மென்ட் நடந்தது.

போதி தருமராக வந்த அந்த இன்டர்நெட் டேடாபேசுக்கு மனதார நன்றி செலுத்தினான்.

மூன்று நாட்களில் வர்ஷினி பூரண நலன் அடைந்தாள். மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.

அவன் முகத்தில் இன்டர்நெட் நண்பர்கள் இப்படியாவது உதவினார்களே என்ற மிகுந்த சந்தோசம்.  

ஒரு வகையில் தண்டமாக காலத்தின் கேடாக வெட்டிப்பொழுது போக்கும் இன்டர்நெட் சாதனம், தன மகளுக்கு உதவியதில் அவனுக்கு பரம திருப்தி.

வளரும் நாடான இந்தியாவில் ஒரு பீடியாட்ரிக் ஸ்பெசலிஸ்ட் ஆஸ்பத்திரி இல்லாதது எவ்வளவு கொடுமை...

******


இந்த கதை வம்சி சிறுகதை போட்டிக்கு (2011) எழுதப்பட்டது.

வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!

கோவை

கோவை பற்றி அவசியம் பார்க்க வேண்டிய விடியோ.

ஆனா அங்கே மட்டும் ஒரு வருடத்துக்கு மேலே நம்ம நாலே தொழில் பண்ண முடியலே.


Monday, October 31, 2011

காதல் ஒரு பட்டாம்பூச்சி

இதை  தான்  எதிர்பார்த்தேன். ஒரு வேலையும் ஓட மாட்டேன் என்கிறது. ஜீசஸ் காப்பாற்றுவாராக.  

கொஞ்சம் போதையில் இருந்தான்.   காதல்!

சேம்சன் நன்றாக வேலை செய்யக்கூடியவன்... ஒரு பேச்சுக்கு மறு பேச்சு கேட்கமாட்டான்... வேலை முடியும் நிச்சயம்...  கணினி துறையில் இருப்பவர்களுக்கு ஒரு யூனியன் தேவை என்பதில் பிடிவாத கொள்கை கொண்டவன். இன்னும் அதற்கு விடிவில்லை.

அவனுக்கு இப்போது ஒரு காதல் வைரஸ் வந்து துன்புருத்துது  ...  ஒரு ஏஞ்சலாக அவன் மனதில் அலை பாயுது.

அவள்  ராஜி.   கம்பெனியில் கிரிப்டோ ப்ரோக்ரேமர்...  (குறியீட்டு கணினி எழுதுனர்).   அடிக்கடி அவனை கேண்டீனில் சந்திப்பவள்....

அவனுக்கு சளி இருமல் என்றால், விக்ஸ் தருமளவு ஒரு இன்டெரெஸ்ட்.... ஆனாலும் காதல் கத்திரிக்காய்  இல்லை.

 நல்ல பழக்கங்கள் நிறைந்தவன்.   வைனோடு சரி.  ஜீசஸின்  ரத்தம்! அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்த போது லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ ஆல்கஹால் இருக்கும் என்று தெரியாமல் குடித்தவன்... நாபா வேலியில் எல்லாரையும் போல வைன் குடித்தவன்...

ராஜி வீட்டில் அமெரிக்கா மாப்பிள்ளை நிச்சயத்து விட்டார்கள் ... பேர் என்னவோ சண்முகம் ... என்று  கேள்விப்பட்டவுடன் தான் அவனுக்கு உதறல் எடுத்தது....  அவ்ளோ தானா?  அவன் பெரிய சம்பள படிப்பு கிராக்கியா இருக்கும்!

எப்படி இதை தடுப்பது, என் மனைவியாக ஏற்பது? நடக்குமா? மதம் தடுக்குமா?

*****

எப்போதும் போல அமெரிக்க மாப்பிள்ளை என்றதும், சந்தோசமாக இருக்கும் பெண்களை விட அவள், சிறிது வித்தியாசமாக காணப்பட்டாள்...   எப்போதும் ஒரு பதற்றம்...

சோகம் இல்லை.... ஆனால் கண்களில் ஒரு விரட்சி...

சேமசன் - உன்னோடு பேசணும் என்றாள்...  நான்கு மணி டீ ப்ரேக்.

சரி கேண்டீன் போலாம் ராஜி... சேம்சனுக்கு ஒரு குறுகுறுப்பு..  என்னவோ நடக்குது...  இளையராஜாவும், ரஹ்மானுக்கு ஆளுக்கு ஒரு மூலையில் அவன் மூளையில் பி.ஜி.எம் செய்தார்கள்...

அப்போது அவன் செல்போன் அலறியது... என்ன கொடுமையோ...  மேனேஜர் கூபிடுறார்... அஞ்சு நிமிஷத்தில் வர்றேன்.

ராஜி மௌனித்தாள்....  "அப்புறம் க்யுப் பக்கம் வாங்க சேம்! நிச்சயம் பேசணும்!"
 
வர்றேன்...  சேம் விடுபட்டான்...

இருவரும்  அந்த ஷனத்திலிருந்து  விடுபட்டனர்.

*****


ரவி.. மிகவும் ஆஜானுபாகுவான ஆள்... செகூரிடி சாப்ட்வேர் எக்ஸ்பெர்ட்... தொழில் முறையில் எல்லாம் சேமிற்கு சொல்லிக்கொடுத்தவர்.  சேமின் மேனேஜராக இருந்தாலும் ஒரு நண்பராக இருப்பவர்.....

உட்காருப்பா சேம.

லிச்சென் .... நமக்கு ஒரு ரெண்டு பேரை இன்வெஸ்டிகேட் பண்ணனும்.  சேலஞ்சிங் கேஸ். க்யுப்வால்ட் க்ளையன்ட் ரிகுவேஸ்ட் ... உன்னை விட்டால் வேற ஆள் இல்லே. அவங்க சப்போர்ட் பண்ற பேன்க் நெட்வர்கில்  ஹேக் பண்றாங்க.  இப்போ ஒரு மாசத்திலே நானூறு  கிரெடிட் கார்ட்   நம்பர்ஸ் திருடி இந்தியாலே விற்றுவிட்டாங்க....   அவ்வளவு ஈசியா அந்த கம்பெனி கார்டை மிமிக் பண்ணி யூஸ் பண்ண முடியாது. பாஸ்வோர்ட் போக, ஐரிஸ் ஸ்கேன் வேண்டும்.... எல்லாமே இந்தியாலே செலவு ஆகியிருக்கு...  ஐரிஸ் ஸ்கேன் இமேஜிஸ் எடுக்கிறது ரொம்ப கஷ்டம்.  ஒரு பெரிய லாஜிக் செகுவேன்ஸ் இருக்கு. இருந்தாலும் ரெண்டு மில்லியன் செலவு பண்ணியிருக்கான் களவானி ஒருத்தன்... அமெரிக்காவிலே ..  பாஸ்டனில் இருக்கான்.

ரெகுலரா ஹேக் பண்ணின ரெண்டு ஐ.பி. அட்ரெஸ் கிடைச்சது... ஒன்னு.... கிளையன்ட்  கிட்டே வேலை பார்க்கும் ஆள் ஒருத்தன், இன்னொருத்தன் நம்ம கம்பெனி ஆள்.

அவன் பேரு எஸ்.பி.கோகுல் .  அவனுக்கு இந்தியாலே ஒரு ஹெல்பர் ஆள் இருக்கான்... பேரு விஷ்ணுனு தகவல் கிடைச்சிருக்கு...  அந்த பேர்லே நம்ம கம்பெனிலே யாரும் இல்லே... இன்னும் ஒருத்தர் நம்ம  கம்பெனியில்  உள் இருந்து ஹெல்ப் பண்றாங்க... யாருன்னு தெரியாது.

இவெங்க ஹெகிங் நெட்வர்க் சிம்பிளா இருக்கு... ஆனா எப்படி அவன ஐரிஸ் ஸ்கேனை எடுத்தாங்க ...  தெரியலே....  அதை தான் நீ கண்டுபிடிக்கணும்...

இந்த இந்த ரெண்டு ஐ.பி. அட்ரெஸ்... ஒரு காகிதத்தில் குறித்துக்கொடுத்தார்     ரவி... .  எப்படியோ உன் செகூரிடி இன்வெஸ்டிகேடிவ் இன்டலிஜென்ஸ்  இதுக்கு வேலை பார்க்கணும்...

ஓகே சார்.  சேம மனதில் சஞ்சலம்....  சே... எதோ மூடில் இருந்தேன் , இப்போ இது வேற.

சரி சொந்த விஷயம் நிற்கட்டும்.  கம்பெனி வேலை முக்கியம்...

அதில் ஐக்கியமானான்.


******

ஐரிஸ் ஸ்கேன் இமேஜஸ் எங்கே எடுத்திருப்பாங்க?  அந்த கம்பெனி... ஆளே, பேங்கின் நெட்வர்க்கில் இருந்த எடுக்க முடியாதே?   க்யுப்வால்ட் பெரிய கம்பெனி ...

செகூரிடி பாஸ்வர்ட் என்ன?

என்கோடர் சாப்ட்வேர் எழுதினது  ராஜி தானே... கேட்டிடுவோம்.  அவ தான் பேசணும் என்றாளே...  மறந்திட்டோம்....

அவள் க்யுபிற்கு சென்றான்.   சாயந்திரம் ஆறு மணி...  கிளம்பிட்டாளா ?

ராஜி டெஸ்க் மீது  ஒரு செல்போன், சினுங்கிக்கொண்டு இருந்தது. இரண்டு ஸ்லிப் பேப்பர்....

[Savaal%255B3%255D.jpg]

இரண்டு ஸ்லிப்புகள்...  எதற்கு ராஜி டெஸ்கில்?

ஒன்று ...  விஷ்ணு  யாருக்கோ Sir  போட்டு எழுதிய மெயில்.... snippet .  யார் அந்த சார்?

இன்னொன்று ...      விஷ்ணு கோகுலுக்கு எழுதிய மெயில் ... குறியீடு? பாஸ்வர்டுடன்...

சேமுக்கு புரிந்தது...  அது தான் அந்த ஐரிஸ் ஸ்கேன் இமேஜஸ் க்யுப்வால்டின் பாஸ்வர்ட்...  இல்லாவிட்டால்  வேறு ஒரு அக்கவண்டின்   பாஸ்வர்ட்? குழம்பியது...


மீண்டும் செல்போன் சிணுங்கியது....


அப்போது... ராஜி வந்தாள்... செல்லை அணைத்தாள்.

சேம்... எல்லாமே சொல்லிடறேன்....  நீ தான் என்னை காப்பாத்தணும் ....  அதை பத்தி பேச தான் உன்னை கேண்டீனுக்கு கூப்பிட்டேன்....

*****

சொல்லு...  சேம் மவுனத்தில் ஆழ்ந்தான்...

ராஜி சொல்ல ஆரம்பித்தாள்.

பாஸ்டனில் இருக்கும் எஸ்.பி.கோகுல்  தான் என் பியான்சே.  யாருக்கும் நான் அவர் முழு பேரை சொல்லலே. சண்முகம் என்றே சொன்னேன். சண்முக பிரசாத் கோகுல்.  அவர் அந்த அமெரிக்க பேங்கின் ஐ.டி. டேபார்ட்மேண்டில்  சீனியர் ப்ரோக்ராமர்.

நிச்சயம் பண்ணினவுடன், அவர் அமெரிக்க போயிட்டார் போனில் பேசி பழகினோம்.

ஒரு நாள் கூப்பிட்டார் ..     அவர் ஒரு ஆபத்தில் மாட்டிகிட்டதாகவும் ... அவரோட சிஸ்டம் பாஸ்வர்டை யாரோ ஹேக் பண்ணி, க்யுப்வால்டை திறத்து நானூறு ஐரிஸ் ஸ்கேன் இமேஜசை, கார்ட்  டிடேயில்சை  எடுத்திட்டாங்க... இந்தியாலே 2 மில்லயன் டாலர் அளவு செலவு பாண்ணியிருகாங்க...

பொறி வைத்து பிடிக்கணும்னு அவர் விஷ்ணுங்கிற  இன்பார்மரை கண்டுபிடித்தார்...  அந்த விஷ்ணு வேற யாரும் இல்லே ... நம்ம ப்ரோக்ரேமர்  ராமு தான் அது. அது ஒரு நிக் நேம். யாரோ ஒரு பெங்காலிக்கு கார்டு டீடெயில்ஸ்   இமேஜ் வால்ட் பாஸ்வர்டோட மாற்றி விற்றிருக்கான். அதனாலே தான் கோகுலாலே அந்த வாலட்டை கொஞ்ச நாள் அக்சஸ் பண்ண முடியலே. அது அவர் என்னை பெண் பார்க்க இந்திய வந்த நேரம்.

நான் தான் ராமு கிட்டே பேசி, அந்த பாஸ்வர்டை வாங்கி கொடுத்தேன். அதுலேயும் டபுள் க்ராஸ் பண்ணியிருக்கான் ராமு....  அந்த மெயிலை நான் பார்த்துட்டேன் ... பிரிண்ட் பண்ணி உன்கிட்டே காட்டி ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்... நீ கால் வந்து பிசியாயிட்டே...


இப்போ என்ன பண்றது சேம்... கோகுலை காப்பாற்றனும் . ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்....

*****

இப்படி தான்  வாழ்க்கை போகனுமா... ?

சேம்  உற்று பார்த்தான்...... சரி ராஜி.... எப்படியோ உன் சண்முகத்தை காப்பாத்துறேன் ...  இது உன்மேலே நான் வச்சிருந்து காதலாலே... ஆனா உன்னை என்னாலே  எப்பவோம் மறக்க முடியாது..

அவன் கண்களில் கண்ணீர்....  காதல் என்ற கத்திரிக்காய் பண்ணிய விளையாட்டு ...

எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும். காதலுக்கு இது ஒரு மரியாதை.

மங்கிய வெளிச்சத்தில்  ஜன்னல் வெளியே ஒரு பட்டாம்பூச்சி பறந்து சென்றது.

அது தான் காதலா?


*****

சில நாட்கள் கழித்து சேம்சன் இன்வெஸ்டிகேட் செய்து, அந்த வெளிநாட்டு கும்பலை அடையாளம் காண உதவி செய்தான்.

கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது.

கோகுலும் ராஜியோடு தன கல்யாண வாழ்க்கையை சந்தோசமாக கழிக்க ஆரம்பித்தான்.

சேம்சன் மனதில் தான் இனம் புரியாத விரக்தி. அவன் அப்பா அம்மா பார்த்த பெண்ணை மனம் முடித்து, வாழ்க்கையை ஒவ்வொரு படியாக அனுபவித்து வாழ்ந்தான்.

 இப்படியாக கதை முற்று பெறுகிறது.