Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, May 20, 2016

சாவைப்போல

சாவைப்போல
நிம்மதியை கொடுக்கும்
அருமருந்து
இவ்வுலகில்
வேறு எதுவும்
கிடையாது
தனக்கும் பிரச்சனையில்லை
சேர்ந்தவருக்கும் ஒன்றுமில்லை
காலமது
கடமையை செய்துவிடும்
இயற்கையோடு
இணைத்து விட்டால்!



எப்போதோ சிறு வயதில் ரசித்து எழுதிய கவிதை... அசை போடுகிறேன்.

Wednesday, February 01, 2012

கலரில் என்ன இருக்கு?

கலரில் என்ன இருக்கு.

அதை ஒரு அட்வாண்டேஜாக எடுத்துக்கொள்ளுங்க.

மனிதரில் இந்த கலர் மோகம் ஏன்?

ரொம்ப கஷ்டம்....

பல கிரீம்கள். வெய்யில் படாமல் காத்தும் ... 

போவது மண்ணுக்கு தானே? 

என்னை பொறுத்த வரை , கலர் ஒரு மாயை.

அழகு கலர் கருப்பு / பிரவுன் / மஞ்சள். 

வெள்ளை / பிங்க் வேஸ்ட்.

Saturday, November 05, 2011

கவிதை எழுதுவது

அமைச்சர்கள் மாற்றம். என் ப்ரேரோகேடிவ் . அம்மா. இல்லேன்னா சும்மா.  #கவிதை

கிரிக்கெட் இல்லாவிட்டால் கிட்டிப்புல். இருக்கவே இருக்கு குப்பம். ஆந்திரா!  #கவிதை

எழுதுவது என் ப்ரேரோகேடிவ். படிப்பது உங்களுடையது. சமநிலை. #கவிதை

முடியும் என்பார்கள். ஆனால் முடியாது. காசு இருக்காது. கட்சி நடத்துவது கஷ்டம். #கவிதை

எழுதுகிறேன் கவிதை!

என் கவிதையை
நான்
நன்றாக எழுதுகிறேன்
என்ற
நம்பிக்கை
எனக்கு இருக்கு.


Friday, October 07, 2011

மழை

மழை மேகம் வந்து நிற்க
மௌனங்கள்  களைகின்றன
சட சடவென்று மனதும் திகன்றிட
உன்னருகில்  நான் இருக்க
கவிதை வரைந்தேன் உன் முதுகில்
சிணுங்கினாய் என்ன திரும்பி பார்த்து
உன் முந்தானை என் முகத்தை வருட
அலாரம்!
அணைத்துவிட்டு... 
மீண்டும் பழைய ஞாபகங்களில் திளைக்க
நாளொன்று போகுமே!     

Monday, June 28, 2010

சந்திப்பு

சந்திப்பு

அழையா விருந்தாளிகள் இருவர்
சந்திப்பில் மூக்கை நுழைக்க
அடித்துக்கொள்கிறார்கள் பதிவில்
அசிங்கமாக
அமர்ந்தோர் கசபடைய அனைவரும்
சினிமா பேசியே
கொல்கிறார்கள் என்றவர் கேட்டது
அஜித்தை பாலா
ஆள் வைத்து அடித்தாரா?
என்னே ஒரு தலைப்பற்று?
முகம் சுருங்கியது அவருக்கு
பாலாவே அடித்தார் என்றவுடன்
அதை பார்க்க சகிக்கவில்லை!
சோறிட்டவர் யாரென்று
தெரியாமல்
நிறைவாக உண்டவர்
நன்றி தெரிவிக்க நாதியின்றி
தூர் போற்றல் செய்கிறார்!
இதுவன்றோ இலக்கியம்
செம்மொழி போற்றுதும்!
--
Regards
Vijayashankar

Tuesday, June 01, 2010

தனிமை

அமெரிக்காவிலிருந்து திரும்புகிறார்களாம்
நண்பர்கள்
தனிமையை வெல்லுகிறார்களாம்
இந்தியாவில்!
இலக்கியம் இருக்கிறதாம்
வட்டம் உள்ளதாம்
எட்டுமடங்கு சம்பளம் கிடைத்தாலும்
ஏக்கம் இல்லாமல்
இங்கேயே  குப்பை கொட்டுவார்களாம்!
பிழைக்க தெரியாதவர்கள்
என்ன சொல்ல!
:-)

Monday, May 31, 2010

மின்னுது மின்னல்

மின்னுது மின்னல்
அடித்து தூள்
கிளப்புது கண்ணில்
வருகிறது மயில்
தோகை விரித்தாட
வானம் நகைக்கிறது
மழை வரட்டும் என
தண்ணீர் பஞ்சத்தில்
சொம்பு தூக்காமல்
குடம் எடுக்கணும்
மானிடம் வெல்லும்!

--
அன்புடன்
விஜயஷங்கர்

Thursday, March 25, 2010

கவிதை : காசு கயமை உயிர்

காசு தான் உலகம் என்றிருப்போரே
கயமை தனம் செய்கிறார்கள்
தூசு இந்த உயிர்கள் என்போர்
துஷ்டத்தனம் செய்கிறார்கள்

Thursday, March 18, 2010

மரக்குதிரை

ரேசன் கார்டு வாடகைக்கு
ரேசன் எடையில் தில்லுமுல்லு
கம்ப்ளயின்ட் கொடுக்க சென்றார்
கவர்ன்மென்ட் ஆபிஸ் அருகே
டீக்கடையில் கூசாமல் லஞ்சம்
ஆயிரம் ருபாய் சட்டை போட்டிருக்கும்
ஆறாயிரம் ருபாய் சம்பள அதிகாரி


புகார் கொடுக்க செல்லுமிடத்தில்
ஏழை பெண்ணின் கற்புக்கு
விலை பேசும் காவல் அதிகாரிகள்

கோவிலுக்கு சென்றால்
தரிசனம் செய்ய லஞ்சம்
பூசாரிக்கு கையூட்டு
பிரசாதம் கொடுக்க
விரக்தி அடைகிறார்

வீரிட்டு வரும் அழுகை
அடக்குகிறார் தனிமையில்
பீறிடுகிறது இதயம்
வேகமாக செல்கிறார்
எம்.எல்.ஏ கட்டிய பாலம் மீது
இடிந்து நொறுன்குகிறார் சேர்ந்து
கான்றேக்டரின் தவறில்

ஆட்டோவிற்கு அதிக காசு
அவசரமாக விரைந்திட
அரசு ஆஸ்பத்திரியில்
அல்பாயுசில் பரலோகம்
செல்கின்றார்
கவனிக்க டாக்டரின்றி
பாவம் நம் நாயகன்



***

வடகரைவேலன் எழுதிய

கதம்பம் - 15/03/10 படித்தேன்.

இது அதில் வரும் ஒரு கவிதைக்கு மாற்று.

Like I said to Writer Payon once... this is my self styled paraphrase. :-)

Sunday, February 14, 2010

ஹேப்பி வாலண்டயின்ஸ் டே

என்னவோ சொல்றாங்கப்பா
என் மகனும் கார்டு வரையறான்
ஏழு வயசிலே க்லாஸ்மேட்டுக்கு
கத்தரிக்கா காதல்.... அன்பு?
என்ன சொல்றதுன்னு தெரியலே
ஹேப்பி வாலண்டயின்ஸ் டே
சொலிட்டா சாப்பாடு வருமா?
நாட்டுலே கஷ்டம் தீருமா?
போய் அவிங்க அவுங்க
வேலைய பாருங்கப்பா!
ரிசசென் இங்கே கொல்லுது!

Wednesday, November 18, 2009

அவசரகதி

அவசரகதி அந்த
ரயிலுக்கு இல்லை
இடம் கிடைத்தால் போதும்
முன்பதிவில்லாத பெட்டியில் 
கெஞ்சல்கள்
நல்ல மனது படைத்தவர்கள்
உதவி செய்ய
பொழுது விடிய
எப்படியோ ஊர் போய்
சேர்ந்தால்...
நடக்க வேண்டிய காரியம்
நன்றாகவே நடந்திருக்கும்!

மீண்டும் ஊரு திரும்ப
மீண்டும் ஒரு முறை
கெஞ்சல் ஆரம்பிக்கும்!

Image result for train station

Tuesday, August 04, 2009

மரம்

பேப்பர் வேஸ்ட் செய்யாதே
மரங்கள் நிறைய வெட்டுகிறார்கள்
என்றேன் மகனிடம்
ஒன்றும் சொல்லாமல் சென்றவன்
சிறிது நேரம் கழித்து
ஒரு படத்தோடு வந்தான்
மரம் அழுதுக்கொண்டு இருந்தது
பக்கத்தில் மரம்வெட்டி கோடாலியுடன்
அவன் அருகில் ஓர் சிறுவன்
"வெட்டாதே" என்கிறான்
எனக்கு சொல்ல வார்த்தையில்லை!

Friday, July 24, 2009

கரண்ட்டும் சண்டையும்

அபார்ட்மென்டில் அமளி
அசோசியேசன் நடத்துபவர்கள் கேட்டது
அதிகம் மாதம் இருநூற்றிஎன்பது
கர்நாடகாவில் கரண்ட் கட்!

ட்ரான்ஸ்பார்மர்கள் செயல் இல்லை
இடம் மாற்றம் சப்பைக்கட்டுகள்
வாரம் இரண்டு நாள்
எட்டு மணி நேரம் கரண்ட் கட்!

மூக்கால் அழுது பணம் கட்ட
மாதம் எட்டு நாளுக்கு கரண்ட்
இல்லாக்கொடுமை இல்லை ஜெனரேடர் ஓட்டம்
மாத இறுதியில் கரண்ட் பில் முன்னூறு குறைவு!

--
Regards
Vijayashankar

Thursday, July 16, 2009

என் காதல் டைரி

நண்பர் திருப்பூர் சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய ஒரு கவிதை...

என் காதல் டைரி

உன் மௌனங்களின் நாராசாரத்தில்
என் ஆழ் நித்திரை பாழ்..
எதிர்ப்படாத நீ தரும் இம்சைகள்
எதிரில் வந்து கத்தியில் குத்தினாலும்
தேவலாம் போன்ற வலிகள்....

எத்தனை மெல்லியவள் நீ...
ஆனால் உன் காதலை வன்முறை போலவே
உணர்கிறது என் மனது..
எனக்கு நீ கிடைக்காத ஏக்கத்தை விட
கிடைக்காமலே போய் விடுவாயோ
என்கிற சந்தேகம் தான் பெரிய கவலை. ....

ஒவ்வொரு இரவிலும் உன் திருமணப்பத்திரிகை
நூல் அஞ்சலில் வருகிறது கனவாய்...
என் பெயர் இல்லாமல் இருக்குமோ என்று அஞ்சியே
அவைகளை என் ஒவ்வொரு கனவிலும்
பிரிப்பதே இல்லை. ...

நீ அமைதியின் ரசிகை என்பதை புரிந்தும் கூட
என் பதற்றங்களை என்னிடமிருந்து ஒழிக்க முடியவில்லை.

நான் உன்னை விரும்பாமல் இருந்திருந்தால் ஒரு சமயம் நீ
என்னை விரும்பியிருப்பாய். ....- அதற்காக உன்னை
விரும்பாமல் இருக்கும் திறன் என் வசமில்லை.

நான் உன்னைக் காதலிக்கிறேன்.. காதலிக்கிறேன்.....
என்னை நீ உதறித்தள்ளுவது பொருட்டே அன்று......

Friday, May 08, 2009

அலைகளும் நிலாவும்

அலைகள் ஆர்ப்பரிக்கின்றன
கடற்கரை மீது படர்கிறது
நிலா எழுகிறது
நோகாமல் பிரிக்கிறது

நீ நடந்த
கால் தடங்களை
அழிக்காமல் இருக்கவா
நிலா செய்தது பெண்ணே?

காண கண்டேன் அற்புத காட்சி
நிலா மீண்டும் வரும் முன்
மீண்டும் ஒரு முறை
மெல்ல நடந்துவிடு!

Saturday, September 27, 2008

வறுமை

வறுமை பல வகை
இருந்தும் இல்லாமல் இருப்பது

இல்லாமல் இருக்கும்போது
இருப்பதாக நினைத்துக்கொள்வது

இதில் நான் எந்த வகை
எனக்கே தெரியவில்லை

காலம் பதில் சுழலும்
மனதில் மகிழ்ச்சியூட்டும்!

Tuesday, September 23, 2008

தடுமாற்றம்

என் இந்த தடுமாற்றம்
வாழ்க்கை என்ன ஆகிறது
முடிவுகள் போக்கு சரியில்லை
விதி யாரை விட்டது
வியாபாரம் படுத்து விட்டது
நண்பர்கள் கொடுப்பினை இல்லை
நயவஞ்சகர்கள் நேசத்திலே
மனைவியும் நச்சரிக்கிறாள்
லட்சங்கள் எங்கே என்று
குழந்தைகள் கேட்பது
விளையாட்டு சாமான்கள்
அவர்களுக்கு தெரியுமா?
உணவிற்கே சக்தியில்லை என்று
ஆண்டவா வாழ விடு!

Friday, July 18, 2008

காமம்

காமம் எனக்கு உணவு
கலவியில் தொடங்கியது
வேதாளங்கள் சாத்திரங்கள்
ஓதிய பிறகு
தேடித் தேடி உண்ணும்
ஆவல் எனக்கில்லை
தேடலும், தாகமும்
நீ தானே
உனக்கான தாகம்
எனக்குள்ளே எப்போதும்
மரணம் எட்டும் வரை

Friday, July 21, 2006

ஏஷுவா

மகனின் சிறப்பு தோற்றம்
எப்படி இருக்கும்
என்று யுத நண்பன் கேட்க
மேற்கின்
கர்ப்ப அறைகளெங்கும்
மத்தாப்புத் தோரணங்கள்
மேகங்கள் இல்லாமல்

நட்சத்திரங்கள் அணிவகுப்பு
ஏஷுவா வரப்போகிறான்
கிழக்கின்
கர்ப்ப அறைகளில்தான்
கலாச்சாரக்
கதிரவன் பிறக்கிறான்
பயமெல்லாம்
ஜெருசேல மயானக்கரைகளில்
எப்போதும் கூட்டம்
பார்க்கின்றபோது
அங்கும்
செத்தே
பிறந்துவிடுவானோ
என்று
பதட்டமாய் இருக்கிறது
எனக்கு ஆயிரம் வருடங்கள் தவம்
பெத்லஹேமில் 
பிழைத்துவிடு ஏஷுவா!